யாராவது எங்களை காப்பாற்றுங்கள்.. ப்ளீஸ் ஹெல்ப்.. ஈசிஆர் விபத்தின்போது கூக்குரலிட்ட யாஷிகா ஆனந்த்
சென்னை: கார் விபத்தில் சிக்கிய போது நடிகை யாஷிகா ஆனந்த் காப்பாற்றுங்கள் , காப்பாற்றுங்கள் என உதவி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பஞ்சாபை சேர்ந்த மாடலான யாஷிகா ஆனந்த், தமிழில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவருக்கு கை வசம் நிறைய படங்கள் உள்ளன. இந்த நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன் தினம் இரவு காரில் மாமல்லபுரம் அருகே ஒரு ரிசார்ட்டில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

மாமல்லபுரம்
இந்த பார்ட்டி முடித்துக் கொண்டு அவர் மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

தடுப்புச் சுவர்
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இந்த வேகத்தில் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. நள்ளிரவு 1 மணி என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமானது குறைவாகவே இருந்தது. இதையடுத்து காருக்குள் சிக்கியிருந்த யாஷிகா ஆனந்த் தங்களை காப்பாற்றுங்கள் , காப்பாற்றுங்கள், ப்ளீஸ் ஹெல்ப் என சப்தமிட்டார்.

கார் விபத்து
இதை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து பார்த்த போது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த நடிகை யாஷிகாவையும் அவருடைய நண்பர்களையும் மீட்டனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஓட்டுநருக்கு இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஹைதராபாத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications