ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன?
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 'அதானி டோட்டல் கேஸ்' (Adani Total Gas) பங்குகள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. கேஸ் சிலிண்டர் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் அதிகரித்துள்ளன. இன்று ஒரே நாளில் சுமார் 10% வரை உயர்ந்து முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ள இந்தப் பங்கின் ஏற்றத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணிகளை அலசுவோம்.

என்ன நடக்கிறது சந்தையில்?
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் இயற்கை எரிவாயு விநியோகப் பிரிவான 'அதானி டோட்டல் கேஸ்' பங்குகள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28% க்கும் மேல் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில், ஒரு பங்கின் விலை ₹622.75 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 9) இப்பங்கு தனது 52 வார கால குறைந்தபட்ச விலையான ₹462.80-ஐத் தொட்டது. அங்கிருந்து மீண்டு வந்து தற்போது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீர் ஏற்றத்திற்கு 3 முக்கிய காரணங்கள்:
1. எரிவாயு தட்டுப்பாடும் அதீத தேவையும்:
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, இயற்கை எரிவாயுவுக்கான தேவை விண்ணைத் தொட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பிஎன்ஜி (PNG) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேவை அதிகரிப்பே அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2. மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் சூழல்:
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வரும் எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. நிறுவனத்தின் வெளிப்படையான அறிக்கை:
நேற்று (மார்ச் 11) பங்குச் சந்தை வெளியீட்டில் அதானி டோட்டல் கேஸ் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலால் தற்காலிகமாக விநியோகம் பாதிக்கப்பட்டாலும், அதைச் சமாளிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும், ரிஸ்க் மேனேஜ்மென்ட் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தை நிலவரம் - ஒரு பார்வை:
சந்தை மதிப்பு: ₹68,292.71 கோடி.
ஒரு மாத லாபம்: 16% க்கும் மேல்.
ஒரு வருட லாபம்: 3.75%.
52 வார உச்சம்: ₹798 (செப்டம்பர் 23, 2025).
நீண்ட கால அடிப்படையில் (3 மற்றும் 5 ஆண்டுகள்) இப்பங்கு சரிவைச் சந்தித்திருந்தாலும், தற்போதைய எரிசக்தி நெருக்கடிச் சூழலில் இப்பங்கு மீண்டும் ஒரு 'கம்பேக்' கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
பங்குச்சந்தை முதலீடுகள் அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை ஆலோசிப்பது அவசியம்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications