சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்து கொண்டிருக்கும் புகழ்பெற்ற 'ஷாங்ரி-லா டயலாக்' பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் இந்தியாவைப் பற்றி மிக முக்கியமான, அதேசமயம் உலக நாடுகளின் கவனிப்பைப் பெற்றுள்ள சில கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். டொனால்ட் ட்ரம்பின் வலதுகரமாகப் பார்க்கப்படும் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் பேசியதன் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.
"இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அச்சாணி இந்தியா"
சிங்கப்பூரில் நடந்துகொண்டிருக்கும் புகழ்பெற்ற 'ஷாங்ரி-லா டயலாக்' பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், "தெற்காசியாவைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் காக்கும் ஒரு வலுவான அச்சாணியாக இந்தியா திகழ்கிறது" என்று ஓப்பனாகப் பாராட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "இந்தியா தனது சொந்த நலன்களுக்காக எடுக்கும் முடிவுகளும், அதன் ராணுவப் பலமும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகார சமநிலையை சீராக வைத்திருக்க அமெரிக்காவுக்குப் பெரிதும் உதவுகிறது" என்றார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் 'சொந்த நலன்' என்று குறிப்பிட்டதற்குப் பின்னால் ஒரு பெரிய ராஜதந்திரம் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போராக இருக்கட்டும், அல்லது பிற உலக விவகாரங்களாக இருக்கட்டும்... அமெரிக்கா என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் இந்தியா எப்போதும் தன் நாட்டு மக்களுக்கு எது லாபமோ, அதைத்தான் செய்யும் (உதாரணத்திற்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியது). இதைக் கடந்த காலங்களில் அமெரிக்கா விமர்சித்தாலும், இப்போது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு, இந்தியாவின் இந்த 'சுயநல' வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அதைப் பாராட்டும் நிலைக்கு வந்துள்ளதை ஹெக்செத்தின் பேச்சு காட்டியுள்ளது.
இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல்- அமெரிக்கா வியப்பது ஏன்?
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தற்போது கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியா தனது ராணுவத்தை வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் மிக வேகமாக நவீனமாக்கி வருகிறது என்று ஹெக்செத் சுட்டிக்காட்டினார். "இந்தியா தனது ராணுவத் திறனை வலுப்படுத்துவதுடன், மிக உயர்தரமான ராணுவ நடவடிக்கைகளை நீண்ட நாட்களுக்குத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்குத் தனது கனரகத் தொழில் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இதற்கும் காரணம் இருக்கிறது. இந்தியா இப்போது வெறும் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல், உள்நாட்டிலேயே தயாரிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு மாறிவிட்டது. சொந்தமாக ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா தயாரிப்பதுதான் அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அமெரிக்கா தனது பாதுகாப்புத் துறையை உலகமயமாக்கி வருவதாகக் குறிப்பிட்ட ஹெக்செத், இந்தியாவுடன் இணைந்து கூட்டு ஆயுதத் தயாரிப்பில் இறங்க முழு சம்மதம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எதிரி நாட்டு டாங்குகளைத் தகர்க்கும் அதிநவீன 'ஜாவெலின்' ஏவுகணைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதை அவர் பெருமையோடு பகிர்ந்து கொண்டார். இது இரு நாட்டு ராணுவத்தின் தயார் நிலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.
சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை
இந்த மாநாட்டில் சீனா என்ற பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அதன் ஆதிக்கப் போக்கை ஹெக்செத் கடுமையாகச் சாடினார். பசிபிக் பெருங்கடல் பகுதியை எந்தவொரு ஒரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதிக்க முடியாது என்றும், சீனாவின் ராணுவ பலபெருக்கம் மற்ற நாடுகளுக்கு நியாயமான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் எச்சரித்தார்.
யார் இந்த பீட் ஹெக்செத்?
பீட் ஹெக்செத் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் ஆவார். டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதும், யாரும் எதிர்பாராத விதமாக இவரை நாட்டின் மிக முக்கியப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். ட்ரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையைப் போலவே, இந்தியாவின் 'இந்தியா ஃபர்ஸ்ட்' கொள்கையையும் ஹெக்செத் ஆதரித்துப் பேசியிருப்பது உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க வேண்டும் என்றால், அதற்கு இந்தியா மட்டுமே சரியான ஜோடி என்பதை அமெரிக்கா நன்றாகப் புரிந்து வைத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ராணுவ பலத்தைப் பாராட்டுவதுடன், இந்தியாவோடு நெருங்கிய நட்பைப் பேண அமெரிக்கா துடிக்கிறது என்பதை இந்த மாநாட்டுப் பேச்சு தெளிவுபடுத்தியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!














Click it and Unblock the Notifications