மெரீனா பீச் போகும் மக்களே நோட் பண்ணுங்க.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வசதிக்காக இன்று (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாம், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலை, மருத்துவம், கல்வி, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புறநகர் ரயில்கள் சேவை முக்கியப் பங்காற்றி வருகிறது.

railway


குறைந்தபட்ச கட்டணம், வேகமான சேவை போன்ற காரணத்தால் புறநகர் ரயில் சேவையையே பொதுமக்கள் பலரும் தேர்வு செய்கின்றனர். ஒருநாளைக்கு சென்னை சென்னையின் புறநகர் ரயில் சேவையை சுமார் 25 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழித்தடத்தில் 15 முதல் 25 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் டிசம்பர் 8 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+