SPB: ஆயிரம் நிலவே வா.. அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை.. வெற்றிக் கொடி கட்டிய எஸ்பிபி!
சென்னை: அடிமைப் பெண்ணில் எம்ஜிஆருக்கு பாடிய எஸ்பிபி தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடி தற்போது 2020-இல் அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக பாடியுள்ளார் எஸ்பிபி.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது இழப்பு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
எஸ்பிபியின் இசைப்பயணம் என்பது நீண்ட நெடிய பயணமாகும். அவர் அடிமைப் பெண்ணில் எம்ஜிஆருக்கு ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா என்ற பாடலை பாடியுள்ளார்.

சாந்தி நிலையம்
இந்த படம் 1969இல் வெளியானது. சாந்தி நிலையம் படத்தில் இயற்கையெனும் இளையகன்னி பாடலை முதலில் அவர் பாடியிருந்தாலும் அடிமைப் பெண்ணில் அவர் பாடியதுதான் முதல் தமிழ் பாடலாக அமைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் 45 ஆயிரத்திற்கு மேலான பாடல்களை அவர் பாடியுள்ளார்.

ரஜினிக்கு பாடல்
ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அவர் ஓபனிங் சாங் பாடியுள்ளார். அத்தனை பாடல்களுமே ஹிட் அடித்தது. தர்பார் படத்தில் சும்மா கிழி பாடலை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் இனி வெளியாகவுள்ள ரஜினியின் அண்ணாத்த படத்திலும் ரஜினிக்காக பாடலை பாடியுள்ளார்.

பன்முகத் திறமை
பல நடிகர்களுக்கு எஸ்பிபி பாடியிருந்தாலும் அத்தனையிலும் வேறுபாடுகளை காட்டியிருப்பார். ரஜினிக்கு பாடிவிட்டு கமலுக்கு பாடியிருந்தால் குரலே மாறிவிடும். அஜித் , விஜய், விஜய்காந்த் உள்ளிட்டோரின் குரலுக்கு ஏற்ப பாடல்களை பாடியுள்ளார். பாட்டு மட்டுமல்லாமல் நடிப்பு, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் திறமையை கொண்டிருந்தார்.

திரைத்துறையினர்
அப்படிப்பட்ட எஸ்பிபி சங்கீத மேகத்தில் கரைந்து விட்டதாகவே திரைத்துறையினர் சோகத்தில் உள்ளார்கள். அவர் பாடிய பாடல்கள் மூலம் என்றென்றும் உயிர்த்திருப்பார் என ரசிகர்கள் தங்களை தேற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications