ஆரணியை கேட்டும் அதிமுக தரலையா.. இல்லை பாமக விருப்பம் காட்டலையா.. நடந்தது என்ன
Recommended Video

சென்னை: ஒரே தொகுதியில் எதிரெதிராக களமிறங்கினால் மாமனுக்கும், மச்சானுக்கும் இருக்கும் விரிசல் அதிகம் ஆகிவிடுமோ என பாமக தரப்பில் ஒரு பீதி நிலவி வந்தது... நல்லவேளை அதை அதிமுக தவிர்த்துவிட்டது!
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தபோதே அனைவருக்கும் இருந்த அதிர்ச்சியைவிட அதிகமாக ஷாக் ஆனது அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தான்! அடுத்தடுத்த சில பேட்டிகளால் இவர்களிடையே மனஸ்தாபங்களும் அதிகமானது.
ஆரணி தொகுதியானது.. வட மாவட்டம், வன்னியர்கள் ஆதிக்கம், ராமதாசின் செல்வாக்கு.. இதையெல்லாம் கணக்குபோட்டுதான் ஆரணி பாமகவுக்கு ஒதுக்கப்படும் என திமுக கணக்கு போட்டது. வலுவான வட மாவட்டம் என்பதால், அத்தொகுதியில் நாம் போட்டியிட வேண்டாம் என்று திமுக நிர்வாகிகளே கோரிக்கையாக வைத்தார்களாம்.

மனஸ்தாபங்கள்
"பாமகவோட நாம் கூட்டணி வைக்கவில்லை, இதைதவிர வேறு சில மனஸ்தாபங்களும் திமுகவினர் மீது பாமக தொண்டர்களுக்கு உள்ளது. அதனால் வன்னியர் ஓட்டுக்கள் நமக்கு கிடைப்பதே கஷ்டம். பேசாமல் கூட்டணி கட்சிக்கு யாருக்காவது ஆரணியை ஒதுக்கிவிடுங்கள்" என்று திமுக தரப்பில் யோசனை சொல்லப்பட்டதாம். அதனால் இந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கினால், அங்கு விஷ்ணு பிரசாத்தை நேரடியாக களமிறக்க ஸ்டாலின் திட்டமிட்டதாக கூறப்பட்டது.

வலுவான ஓட்டுக்கள்
ஆனால் மற்ற தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த பாமக, ஆரணி விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தது. கடந்த தேர்தலில் வலுவான ஓட்டுக்களை பெற்றிருந்த போதிலும் இப்போது அதிமுகவிடம் ஆரம்பம் முதலே இந்த தொகுதியை கேட்காமல் இருந்தது. காரணம் விஷ்ணுபிரசாத் இங்கு போட்டியிட வாய்ப்பிருக்கும் என்பதால்தான்.

விஷ்ணுபிரசாத்
விஷ்ணுபிரசாத்துக்கு ஆரணியில் செல்வாக்கு உள்ளது. இவரை வேட்பாளராக நிறுத்தினால் வன்னியர் ஓட்டுக்கள் சரிசமமாக பிரியும் வாய்ப்பு உள்ளது. இதுபோக மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம் திமுக-காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வேல்முருகன் சப்போர்ட்டும், அவர் மூலமாக காடுவெட்டி குருவின் சப்போர்ட்டும் ரொம்ப சுலபமாக விஷ்ணுபிரசாத்துக்கு கிடைக்கும் சான்ஸ் உள்ளது!

மிரண்ட பாமக
இதெல்லாம் பார்த்துதான் பாமக தரப்பு மிரண்டு போனதாம். கடைசியில் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்த அதிமுக தானே நேரிடையாக இங்கு களமிறங்குவதாக அறிவித்துள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது. மற்றொன்று ஆரணியை கேட்டும் அதிமுக தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. நிஜ காரணம் எதுவென தெரியவில்லை.. ஆனால் "குடும்பத்தில் குழப்பம், சிக்கல் இல்லாமல் போனதே எங்களுக்கு நிம்மதி" என்கிறார்கள் பாமக தொண்டர்கள்!

வெற்றி யாருக்கு?
எப்படி பார்த்தாலும், ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலத்தையும் இரண்டையுமே அதிமுக தொகுதிக்குள் இறக்கும்நிலையில், இதை எதிர்கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications