அதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி!
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ள நிலையில் அதிமுகவினருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்துள்ளதாக அமமுகவின் துணை கொள்கை பரப்புச்செயலாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு கட்சிக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்றும், இரண்டு தலைமைகள் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை என்றார்.
அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்ற அவர்,தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

குண்டை போட்ட ராஜன் செல்லப்பா
மேலும் 9 எம்எல்ஏக்களை ரவீந்திரநாத்துடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது யார்? என்று கேட்டும் குண்டை தூக்கி போட்டார் ராஜன் செல்லப்பா. இதனால் அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஆள் இல்லை
இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, அதிமுகவை வழிநடத்த கட்சிக்குள் ஆள் இல்லை.

அதிமுகவில் ஆள் இல்லை
இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, அதிமுகவை வழிநடத்த கட்சிக்குள் ஆள் இல்லை.

இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு
அதிமுகவினருக்கு இப்போதுதான் ஞானோதயம் பிறந்துள்ளது. பாஜகவின் நிழலில் இருந்து வரும் அதிமுகவினர் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொதுக்குழுவைக்கூட்டினாலும் அதிமுகவுக்கு திறமையான ஆளுமையை தேர்வு செய்ய முடியாது.

பாஜக தயவில் ஆட்சி
ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சொந்த திறமை எதுவும் இல்லை. அவர்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. பாஜகவின் தயவில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

சட்டத்தை மாற்றினார்கள்
ஜெயலலிதா பெற்று தந்த 37 தொகுதிகளையும் பலி கொடுத்துவிட்டார்கள். பாஜக தயவில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இல்லாத ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினார்கள். தங்களின் இஷ்டத்திற்கு சட்டத்தை மாற்றினார்கள்.

மக்களின் ஆதரவு இல்லை
இப்போது உண்மை வெளியே வருகிறது. மக்களின் ஆதரவு இல்லாததால் எல்லோரும் உண்மையை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அமமுகவின் செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications