சென்னை பட்ஜெட் கூட்டம் தொடங்கிய உடனேயே.. சரசரவென வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்கள்..ஓ இதுதான் காரணமா
சென்னை: சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் இருந்தது. இதனால் மாநகராட்சி ஆணையர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தனர்.
தலைநகர் சென்னையிலும் அதே நிலையே நிலவி வந்தது. பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர்கள் தாக்கல் செய்ததால் புதிய திட்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் இருந்தது,

சென்னை
கடந்த பிப். மாதம் தான் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியது. அதன்படி சென்னையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் திமுக வென்ற நிலையில், சென்னையின் 49ஆவது மேயராக ஆர் பிரியா பதவியேற்றார்.

பட்ஜெட்
இந்தச் சூழலில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் ஆர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக கடைசியில் 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.

அதிமுக
இன்று காலை 10 மணியளவில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அதிமுகவினர் பேச அனுமதி கேட்ட நிலையில், அதற்கு அனுமதி வழங்க மேயர் பிரியா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்துப் பேச அனுமதி தராததால் வெளிநடப்பு செய்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

வெளிநடப்பு
சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்தினரே அதிகம் வசிப்பதாகவும் இப்பகுதியில் சொத்து வரி 100% உயர்த்தப்பட்டுள்ளது ஏழைகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர். இது குறித்துப் பேச அனுமதி கோரிய போது, மேயர் அனுமதி தரவில்லை என்றும் இதனால் வெளிநடப்பு செய்ததாகவும் அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications