அதிமுக விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி..ஏன்?
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை அதிமுக தலைமை அலுவலகம் பெற மறுத்து 2 முறை திருப்பி அனுப்பிய நிலையில் கடித்ததில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டது ஏன்? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக சம்பவம் குறித்து சத்ய பிரதா சாஹூ இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இருக்கும் விஷயம் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கண்டுக்கொள்ளாமல் ஒற்றை தலைமையை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டியது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க திட்டமிடப்பட்டது.

ஒற்றை தலைமை விவகாரம்
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதோடு, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது நிலுவையில் உள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் நாளைய விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடிதங்களில் குறிப்பிடப்படும் பதவிகள்
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இடையே அடிக்கடி வார்த்தை போல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அவரது தரப்பும், அது செல்லாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாஜக மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்களில் குறிப்பிடும் பதவிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழக தேர்தல் ஆணையம் கடிதம்
இந்நிலையில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்குமாறு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டதால், அவரது தரப்பினர் உற்சாகத்தில் இருந்தனர். மத்திய அரசு சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிவந்த நிலையில் திடீரென்று ட்விஸ்ட் ஏற்பட்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் ரிமோட் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்த உள்ளது. இதுதொடர்பான மாநில தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு கடிதம் அனுப்பினார்.

திருப்பி அனுப்பப்பட்ட கடிதம்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இங்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொறுப்பு இல்லை என்பதை கூறும் வகையில் கடிதத்தை திருப்பி அனுப்பினர். மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதேபோல் பதவிகளை மாற்றாமல் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதமும் 2வது முறையாக திருப்பி அனுப்பப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
இந்நிலையில் தான் அதிமுக விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயிலில் அனுப்பிய கடிதத்தில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த கடிதத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது பற்றியும், அதனை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியது பற்றியும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி விளக்கம்
முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக விவகாரம் தொடர்பாக தற்போது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சம்பவம் தொடர்பாக இ-மெயிலில் கடிதம் அனுப்பி உள்ளார்.
-
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications