என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுகவின் அதிரடி நடவடிக்கைகளால் அதிமுக ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் காலி நாற்காலிகளுடன் நடைபெற்ற அதிமுக கூட்டத்தை பார்த்து மேடையில் பேசிக் கொண்டிருந்த கௌதமி அப்செட்டாகி குமுறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. திமுக, அதிமுக 2 கூட்டணிகளிலும் தெருமுனை பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [ADMK Meeting]

காலி நாற்காலிகள்
கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும், தமிழ்நாட்டையே பாதுகாக்கும் அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்கள் வாக்கு தான் அது.
உங்கள் கையில் உள்ள வாக்கு தான் உங்கள் உரிமை. அதை அதிமுகவுக்கு அளித்தால் தமிழ்நாடு பாதுகாக்கப்படும். செய்வீர்களா. செய்வீர்களா.." என்று ஜெயலலிதா பாணியில் கூட்டத்தை பார்த்து கேட்டார். ஆனால் அப்போது பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன. விரல் விட்டு எண்ணுமளவுக்கு தான் மக்கள் கூட்டம் இருந்தது. இதனால் கௌதமி பேசும்போது கூட்டத்தில் இருந்து ஆரவாரமாக பதில் வரவில்லை.
கௌதமி வேதனை
இதைப் பார்த்த அப்செட்டான கௌதமி, "கூட்டத்தை ஆரம்பிச்சதை விட இப்போதுள்ள எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இது நியாயமானதுதான். வீட்டிற்கு திரும்பியவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களின் உழைப்பு மற்றும் கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும்" என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அவர்களை போலவே அதிமுக கூட்டங்களும் காலி நாற்காலிகளுடன் நடக்கின்றன என திமுகவினர் கலாய்த்து வருகிறார்கள்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications