லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து.. மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டு முன்பாக அதிமுகவினர் தர்ணா
சென்ன: லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டு முன்பாக அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த பலருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது
இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டு முன்பாக அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையிலுள்ள காமராஜ் வீட்டு முன்பாக அதிமுகவினர் தர்ணா நடைபெற்று வருகிறது












Click it and Unblock the Notifications