அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்ட ரேஷன் கடையிலேயே துவரம் பருப்பில் கலப்படம்! தமிழகத்தில் ரெய்டு
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்து அது தொடர்பாக இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை குறைந்த விலைக்கும் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 30-க்கு வழங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரேஷனில் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் அரசின் வாணிப கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது.
அருணாச்சலா, எஸ்.கே.எஸ், அக்ரிகோ உள்ளிட்ட 5 நிறுவனங்களிடம் இருந்து 60 ஆயிரம் டன் பருப்பை அரசு கொள்முதல் செய்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரேஷன் பொருட்கள் கிடங்கில் அந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பருப்பு மூட்டையில் உடைக்கப்பட்ட பட்டாணி கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பச்சை பட்டாணி பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது. அதில் மஞ்சள் நிற பருப்பை இரண்டாக உடைத்து சேர்த்ததாக தெரிகிறது.
பின்னர் அங்கிருந்த மூட்டைகளை ஆய்வு செய்ததில் அதிலும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தில் மதுரை மண்டல அதிகாரி லியோ ராபர்ட், வாடிப்பட்டி குடோன் மேனேஜர் ஆனந்த் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேஷன் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துவரம் பருப்பில் கலப்படம் இருக்கிறதா என்பதை பார்க்க மாநிலம் முழுவதும் வாணிப கழக கிடங்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் மட்டுமல்லாமல் வாணிப கழக கிடங்குகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications