பயணத்தை குறையுங்கள்... மனதில் எதையும் நினைக்காதீர்கள்... ஓ.பி.எஸ்.க்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரை
சென்னை: சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனையை முடித்துக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மருத்துவர்கள் குழு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
பயணத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எதையாவது நினைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
தன் மீதுள்ள அக்கறை காரணமாக மருத்துவர்கள் விதித்த அன்புக் கட்டளையை புன்னகைத்தவாறு கேட்டுக்கொண்ட ஓ.பி.எஸ்., முயற்சிக்கிறேன் எனக் கூறினாராம்.

ஓ.பி.எஸ். அனுமதி
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் மாலை அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். சுமார் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்த அவருக்கு முழு உடற்பரிசோதனையை நடத்தி முடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதில் அச்சப்படக் கூடிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் ஓ.பி.எஸ். குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

திடீர் மயக்கம்
ஓ.பி.எஸ். மருத்துவமனை வரை சென்றதற்கு காரணமே ஞயிற்றுக்கிழமை பிற்பகல் அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம் தான். தொடர்ந்து தலைசுற்றல் இருந்ததால் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். இந்த தகவல் நேற்று காலை வரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட யாருக்குமே தெரியாது. இந்நிலையில் இது தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுக்கும் எனக் கருதிய மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை காலை 11 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிட்டது.

அலைச்சல்
இதனிடையே ஓ.பி.எஸ். உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அறிவதற்காக அவரது நீண்ட நாள் ஆதரவாளரும், தேனி மாவட்ட முன்னணி நிர்வாகியுமான ஒருவரிடம் பேசிய போது, '' அவருக்கு அலைச்சல் அதிகம், அதனால் தான் இந்த பிரச்சனை. இப்போது கொரோனா காலம் என்பதால் தேனிக்கும் சென்னைக்கும் இடையே கூட அவர் காரில் தான் சென்று வருகிறார். தொடர்ந்து சுற்றுவதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. இனி அண்ணனை அதிகம் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன்''.

மருத்துவர்கள்
தொடர்ந்து பேசிய அவர், ''இதேபோல் யோகா செய்யச்சொல்லி இருக்கிறார்களாம், மன அழுத்தம் ஏற்படும் வகையில் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்'' என்றார். இதனிடையே ஓ.பி.எஸ். ஓய்வில் உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு அலைபேசியிலோ, நேரிலோ யாரும் நலம் விசாரிக்க வேண்டாம் என அவரது தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications