இனி சென்னையை ‛டாப் ஆங்கிளில்’ ரசிக்கலாம்.. 12 ஆண்டுக்கு பின் அண்ணாநகர் 135 அடி உயர டவர் நாளை திறப்பு
சென்னை அண்ணாநகரின் அடையாளமாக இருந்த 135 அடி உயர டவர் கடந்த 2011ம் ஆண்டு பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
சென்னை: சென்னையின் அழகை டாப் ஆங்கிளில் ரசிக்கும் வகையில் அண்ணாநகர் டவர் பூங்கா இருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக பூங்காவில் உள்ள டவர் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்ட நிலையில் தற்போது புனரமைக்கப்பட்டு மீண்டும் நாளை திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் புதுப்பொலிவு பெற்ற அண்ணாநகர் டவரில் இருந்து சென்னையின் அழகை பொதுமக்கள் மீண்டும் டாப் ஆங்கிளில் ரசிக்க முடியும்.
சென்னை அண்ணாநகரில் ‛டவர்' பூங்கா உள்ளது. இது டாக்டர் விஸ்வேஸ்வரய்யா டவர் பார்க் எனவும் அழைக்கப்படுகிறது. கடந்த 1968ல் இந்த டவரை முன்னாள் துணை ஜனாதிபதி விவி கிரி திறந்து வைத்தார்.
இது 135 அடி உயரம் கொண்ட இந்த டவரில் 12 தளங்கள் உள்ளன. லிப்ட் வசதி மற்றும் படிக்கட்டு வசதிகள் உள்ளன. மேலும் பூப்பந்து மைதானம், குழந்தைகளுக்கான விளையாடுவதற்கான வசதி, ஸ்கேட்டிங் ரிங்க் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

‛டவர்’ பூங்கா
இந்த டவரின் மேல்தளத்தில் ஏறி பார்த்தால் சென்னையின் அழகை அருமையாக ரசிக்க முடியும். இதனால் டவர் மீது ஏறி பொதுமக்கள் சென்னை நகரின் இயற்கை அழகை ‛டாப் ஆங்கிளில்' ரசித்து வந்தனர். குறிப்பாக காதல் ஜோடிகளும் படையெடுத்து சென்றனர். இதனால் அண்ணநகரின் அடையாளமாக இந்த ‛டவர்' பூங்கா மாறிப்போனது.

தற்கொலையால் அனுமதி மறுப்பு
இந்நிலையில் தான் காதலில் தோல்வியடைந்த சிலர் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தனர். இதையடுத்து இந்த டவர் மேல் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு முதல் டவர் மீது ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

ரூ.30 லட்சத்தில் புனரமைப்பு
இதற்கிடையே தான் பூங்காவில் உள்ள டவரை மாநகராட்சி நிர்வாகம் புனரமைக்க வேண்டும். டவர் மீது ஏறி பொதுமக்கள் கீழே குதிக்காத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2018 ல் ரூ.30 லட்சத்தில் டவரை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பணி துவங்கப்பட்டது.

தடுப்புகள் அமைப்பு
உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இந்த டவர் புனரமைக்கப்பட்டு வந்தது. டவரின் மேல்பகுதியில் தடுப்பு கம்பிகள், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டுள்ளது. மேலும் டவரின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவாக காட்சியளிக்கிறது.

நாளை திறப்பு
இந்த பணிகள் தற்போது முழுமைாக முடிவடைந்துள்ளன. இதனால் இந்த டவர் நாளை திறக்கப்பட உள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‛‛இந்த டவர் கடந்த மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் முடிய தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த மாதம் திறக்கப்படுகிறது'' என்றார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு டவர் பூங்காவில் மேல் சென்று பொதுமக்கள் சென்னையின் அழகை ‛டாப் ஆங்கிளில்' ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications