Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தீ பிடித்த ரயில் டீசல் டேங்கர்.. 8 மணி நேரம் போராடி அணைத்த பிறகும் தீ பற்றியதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தீ விபத்தைத் தொடர்ந்து, 8 மணி நேரம் போராடி முழுமையாக தீயை அணைத்த நிலையில், மீண்டும் டீசல் கசிவு ஏற்பட்டு தீ எரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரயிலில் இருந்த 18 டீசல் டேங்கர்கள் மளமளவென தீப்பிடித்து எரிந்து 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல் எரிந்து முழுமையாக நாசமானது. இந்நிலையில் மேலும் ஒரு டேங்கரில் தீ பிடித்துள்ளது.

After 8 Hours of Firefighting Diesel Leak Reignites Blaze on Tanker Train

ரயில் டேங்கர் தீ விபத்து

சென்னை மணலி பகுதியில் இருந்து 52 டேங்கர்கள் மூலம் டீசல் நிரப்பப்பட்டு இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ஏகாட்டூர் இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் தடம் புரண்ட விபத்தில், ரயில் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன.

தீயை அணைக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வர வைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மாநில பேரிட மீட்பு படையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து ரசாயனம் கலந்த நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கரும்புகையால் பாதிப்பு

டேங்கர் லாரிகள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் வரதராஜபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் சென்னை மார்க்கத்தில் காலை ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் கரும்புகை 10 கி.மீ தொலைவில் படர்ந்ததால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள்ல் உள்ள மக்கள் விரைந்து மருத்துவம் பார்க்கும் வசதிக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டன. 8 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டுக்குள் வந்த தீ

தீ முழுவதும் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தண்டவாளப் பகுதியில் விழுந்துள்ள 18 டேங்கர்களை இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக முழுமையாக அப்புறப்படுத்தும் பணிகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்து இருப்பதால், அதனை சீரமைக்கும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில் செல்லக்கூடிய இரண்டு வழித்தடங்கள் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்து இருப்பதால் அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மீண்டும் தீ

இந்த தீ விபத்தால் திருவள்ளூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, தண்டவாள பணிகள் சீரமைக்கப்பட்டு இன்று இரவு அல்லது நாளை காலை இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயிலில் இருந்த டேங்கரை தள்ளியபோது டீசல் கசிவு ஏற்பட்டு மீண்டும் தீப்பிடித்தது. ஏற்கனவே 18 டேங்கர்கள் முழுமையாக எரிந்த நிலையில், மேலும் ஒரு டேங்கரில் தீ பிடித்தது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+