அடுத்த புயல் ரெடியாகிறதா?.. வங்கக்கடலில் ஜூன் 11ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையம்!
சென்னை: வடக்கு வங்கக்கடலில் ஜூன் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம்தான் அடுத்தடுத்து இரண்டு புயல் தாக்கியது. அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை தாக்கியது. இன்னொரு பக்கம் யாஷ் புயல் வங்கக்கடலில் உருவானது.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

எப்படி
இந்த நிலையில் வடக்கு வங்கக்கடலில் ஜூன் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா, மாறாதா என்று வானிலை மையம் இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் வலுவானதாக இருக்கலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

புயல்
11ம் தேதி இங்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் அரபிகடடலில் தென்மேற்கு காற்று காற்று வேகமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் 10ல் இருந்து தென்மேற்கு காற்று அதிகரிக்கும். இதனால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

எங்கு
இதன் காரணமாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் 11ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் ஜூன் 11-13க்குள் தென்மேற்கு பருவமழையை தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும்.

மீண்டும் வரும்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை தொடங்கி கொல்கத்தா வர பல்வேறு முக்கிய நகரங்களால் அடுத்த சில நாட்களுக்கு கனமழைஇ பெய்யும். திசா, மேற்கு வங்கத்தில் அதி தீவிர கனமழை ஜூன் 10, 11 தேதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications