‛ஹைஅலர்ட்’.. கேரளா குண்டுவெடிப்பால் 5 தமிழக எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு.. அதிரடி சோதனை
சென்னை: கேரளாவில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் இன்று அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது ஒருவர் சரணடைந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ரயில் நிலையங்களில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் கிறிஸ்தவர்களின் ஹெஹோவா விட்னஸ் வழிபாடு கூட்டம் நடந்தது. இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலை சுமார் 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் அடுத்தடுத்து வெடித்தது.

இதில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் 10 பேர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் 5 பேரின் நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் முதலில் இது வெடிவிபத்து என கூறப்பட்டது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வெடித்தது வெடிகுண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது ஐஇடி வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவின் தீவிரவாத ஒழிப்பு படை, கேரளா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையில் தான் டொமினிக் மார்ட்டின் என்பவர் யார்? அவர் எதற்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கேரளா குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளா-தமிழக எல்லை மாவட்டங்களா உள்ள கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் பிற மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வனத்துறையினரும் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து யாராவது தமிழ்நாட்டுக்கு வனப்பகுதி வழியே நுழைகின்றனரா? என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவையில் மலையாள மக்கள் வழிபடும் தேவாலயங்களில் மோப்பநாய் உதவியுடன் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ரயில்களில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் ஹைஅலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications