இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு!?
கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.
சென்னை: கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.
Recommended Video
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர், உலகக் கோப்பை தொடங்கி டி20 கோப்பை வரை பல கோப்பைகளை வாங்கி குவித்த தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி ஐபிஎல் போட்டிகளில் இவர் கவனம் செலுத்த இருக்கிறார்.

தோனி ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் தோனி குறித்து ஸ்டேட்டஸ் போட்டு வருகிறார்கள். கடைசி போட்டியில் தோனி ரன் அவுட்டாகிவிட்டார். அவர் வெற்றியோடு தனது கிரிக்கெட் தொடரை நிறைவு செய்து இருக்கலாம். இந்த கொரோனா காரணமாக எல்லாம் நாசமாகிவிட்டது. இல்லையென்றால் தோனி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள் .

கிரிக்கெட் உலகம்
அதேபோல் இன்னொரு பக்கம் கிரிக்கெட் வீரர்களும் சோகமாக போஸ்ட் செய்து வருகிறார்கள். அவர் ஒரு ஜாம்பவான், இந்திய அணிக்காக அவர் சிறப்பான சாதனைகளை செய்துள்ளார். உலக அளவில் கிரிக்கெட் உலகில் அவரை போல யாரும் சாதனைகளை செய்தது இல்லை. அவரின் சாதனையை கிரிக்கெட் உலகம் எப்போதும் மறக்காது என்று பலரும் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார். தோனி சோஷியல் மீடியாவில் வேறு எதுவும் போஸ்ட் செய்யாமல் ஜாலியாக தனது அடுத்த பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டார். 7.30 மணிக்கு இந்த கிரிக்கெட் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு , தோனி கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.

செம
ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுக்க தோனி சென்றுவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது தோனியும் பயிற்சி எடுத்து வருகிறார்.

கண்டிப்பாக வெறி
இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெறித்தனமாக இவர் விளையாடுவார் என்று கூறுகிறார்கள். இன்னும் இரண்டு வருடம் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முறை கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் தோனி விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications