Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு!?

கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார்.

Recommended Video

    Retirement அறிவிப்புக்கு முன்பு வரை பயிற்சியில் செய்த Dhoni

    இந்திய அணியின் ஜாம்பவான் வீரர், உலகக் கோப்பை தொடங்கி டி20 கோப்பை வரை பல கோப்பைகளை வாங்கி குவித்த தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி ஐபிஎல் போட்டிகளில் இவர் கவனம் செலுத்த இருக்கிறார்.

    தோனி ரசிகர்கள்

    தோனி ரசிகர்கள்

    கிரிக்கெட் ரசிகர்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் தோனி குறித்து ஸ்டேட்டஸ் போட்டு வருகிறார்கள். கடைசி போட்டியில் தோனி ரன் அவுட்டாகிவிட்டார். அவர் வெற்றியோடு தனது கிரிக்கெட் தொடரை நிறைவு செய்து இருக்கலாம். இந்த கொரோனா காரணமாக எல்லாம் நாசமாகிவிட்டது. இல்லையென்றால் தோனி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருப்பார் என்று ரசிகர்கள் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள் .

    கிரிக்கெட் உலகம்

    கிரிக்கெட் உலகம்

    அதேபோல் இன்னொரு பக்கம் கிரிக்கெட் வீரர்களும் சோகமாக போஸ்ட் செய்து வருகிறார்கள். அவர் ஒரு ஜாம்பவான், இந்திய அணிக்காக அவர் சிறப்பான சாதனைகளை செய்துள்ளார். உலக அளவில் கிரிக்கெட் உலகில் அவரை போல யாரும் சாதனைகளை செய்தது இல்லை. அவரின் சாதனையை கிரிக்கெட் உலகம் எப்போதும் மறக்காது என்று பலரும் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் கிரிக்கெட் உலகமே தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தோனி மட்டும் தன்னுடைய அடுத்தடுத்த பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார். தோனி சோஷியல் மீடியாவில் வேறு எதுவும் போஸ்ட் செய்யாமல் ஜாலியாக தனது அடுத்த பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டார். 7.30 மணிக்கு இந்த கிரிக்கெட் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு , தோனி கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுவிட்டார்.

    செம

    செம

    ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுக்க தோனி சென்றுவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது தோனியும் பயிற்சி எடுத்து வருகிறார்.

    கண்டிப்பாக வெறி

    கண்டிப்பாக வெறி

    இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெறித்தனமாக இவர் விளையாடுவார் என்று கூறுகிறார்கள். இன்னும் இரண்டு வருடம் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முறை கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் தோனி விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+