சட்டென மாறிய வானிலை.. சென்னையில் வெளுத்த கனமழை!
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இரவு 10 மணி அளவில் வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது.

இதேபோல் திருநின்றவூர், பூவிருந்தவல்லி, ஆவடி, பட்டாபிராம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை ஜில்லெனெ கொட்ட ஆரம்பித்தது. சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை வெளுத்தது. பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
சென்னையின் ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
சைதாப்பேட்டை, சின்னமலை,கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், வேளச்சேரி, கோயம் பேடு பகுதிளிலும் காற்றுடன் நல்ல மழை பெய்தது. லாக்டவுனால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மக்கள் மழையை ரசித்தபடி குளிரை அனுபவித்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications