Who is TN Speaker?: தவெக ஆட்சியில் சபாநாயகராகும் "இந்த" இருவரில் ஒருவர்! விஜய் டிக் அடிக்கும் நபர் யார்?
சென்னை: தமிழகத்தில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அடுத்த கட்டமாகச் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களையும் திமுக கூட்டணி 73 இடங்களையும் பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அக்கட்சியின் முக்கியப் புள்ளிகளான வி.எஸ். பாபு அல்லது ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வி.எஸ். பாபு: கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஜெயண்ட் கில்லர்' ஆக உருவெடுத்துள்ளார். இவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வெகுமதியாகச் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஜே.சி.டி. பிரபாகர்: நீண்ட கால அரசியல் அனுபவம் மற்றும் சட்டப்பேரவை விவாதங்களில் தேர்ந்த ஞானம் கொண்டவர் என்பதால், சபையைத் திறம்பட வழிநடத்த இவர் பொருத்தமானவராகக் கருதப்படுகிறார்.
சபாநாயகர் தேர்வு செய்யப்படுவது எப்படி?
சட்டசபை மரபுகளின்படி, புதிய அரசு அமைந்தவுடன் நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
முன்னோடி சபாநாயகர் (Pro-tem Speaker): முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் மூத்தவர் ஒருவரை ஆளுநர் 'இடைக்கால சபாநாயகராக' நியமிப்பார். அவர் மற்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
வேட்புமனு தாக்கல்: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் முறையான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் முறை: ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், ரகசிய வாக்கெடுப்பு அல்லது குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
எத்தனை பேரின் ஆதரவு தேவை?
சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட, சட்டப்பேரவையில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை (Simple Majority) ஆதரவு தேவை.
தமிழக சட்டசபையின் மொத்த இடங்கள் 234. இதில் பாதியளவு, அதாவது 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஒருவர் தடையின்றி சபாநாயகராக முடியும்.
தற்போது தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ், பாமக அல்லது இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்போது, அந்த ஆதரவு உறுப்பினர்களின் வாக்குகளும் சேர்ந்து சபாநாயகர் தேர்வை உறுதி செய்யும்.
சபாநாயகரின் முக்கியத்துவம்
சபாநாயகர் என்பவர் சட்டசபையின் நடுவராகச் செயல்படுபவர். சபையை நடத்துவது, உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர் என்பதால், இப்பதவி மிகவும் அதிகாரமிக்கதாகக் கருதப்படுகிறது.
2026 தேர்தலில் 34.92% வாக்குகள் பெற்று அதிமுகவின் சாதனையை முறியடித்துள்ள தவெக, தனது முதல் ஆட்சிக் காலத்தைச் சட்ட ரீதியாக வலுப்படுத்த ஒரு அனுபவம் வாய்ந்த நபரைச் சபாநாயகர் நாற்காலியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
அது போல் அமைச்சர்களை தோற்கடித்தவர்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் முத்துச்சாமியை தோற்கடித்த ஈரோடு மேற்கு தவெக வேட்பாளர் கே.கே.ஆனந்த் மோகன், ஆர். ராஜேந்திரனை தோற்கடித்த சேலம் வடக்கு தவெக வேட்பாளர் கே.சிவக்குமார், மதிவேந்தனை தோற்கடித்த ராசிபுரம் தவெக வேட்பாளர் லோகேஷ் தனபால், அதிக வாக்கு வித்திசாயத்தில் ஜெயித்த மாதவரம் விஜய பிரபு உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications