தமிழகத்தில் ஓய்வு பெற்ற விஏஓ-க்களுக்கு மீண்டும் பணி.! தேர்வெழுதிவிட்டு காத்திருப்போர் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆயிரம் ஓய்வு பெற்ற விஏஓ-க்களை மீண்டும் பணியமர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் 1 முதல் 3 கிராமங்களை நிர்வகிப்பார்கள் என கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 12, 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பொறுப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை, காலிப் பணியிடங்களில் நியமிக்க தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் விஏஓ பணிகளுக்கான காலியிடங்களில் தகுதியும், சிறப்பான அனுபவமும் வாய்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
ஏற்கனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் முதற்கட்டமாக ஓய்வு பெற்ற சுமார் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தும் நடவடிக்கை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஆலோசனையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் துறை நிர்வாகம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், காலி பணியிடங்களில் ஓய்வு விஏஓ அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கைகளை துவக்குமாறு அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பணியமர்த்தப்பட உள்ள ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தற்காலிக பணி அடிப்படையில், நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரி வசூல், அரசு நலத்திட்டங்களுக்கான சான்றுகள் வழங்கல், பயிர் காப்பீட்டிற்கான மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை மீண்டும் பணியிமர்த்தப்பட உள்ள விஏஓ-க்கள் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாயளர் தேர்வாணையம் புதிய பணியாளர்களை நியமிக்கும் வரை, ஓய்வு பெற்ற விஏஓ-க்கள் பணியில் இருப்பர் என கூறப்பட்டுள்ளது. இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை நீடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவு தேர்வெழுதிவிட்டு காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications