சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சென்னை: அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அரசியல் நடத்தி வருகிறார் சி.வி.சண்முகம். சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது சி.வி.சண்முகம் தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றார் எனக் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மக்களின் நன்மதிப்பையும் இழந்து வருகிறது. யாருடைய கருத்தையும் கேட்க மாட்டேன், குடும்பத்தினர் கருத்தை மட்டும் கேட்பேன், பணம் கொடுப்பவர், பெற்றுத் தருபவர்களின் பேச்சை மட்டும் பழனிசாமி கேட்பதால் நினைத்து பார்க்க முடியாத இழப்பை அதிமுக சந்தித்துள்ளது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால், முதல்வராக வர வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதால் அதிமுக தனது சுய நிலையை இழந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள் தற்போது இயக்கத்தைவிட்டு செல்கின்றனர். அவர்களின் மனவலியை உணராமல் துரோகி என சாதாரணமாக பழனிசாமி சொல்கிறார்.
தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளேன் என பொய் சொல்கிறார். அதில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக தயவால்தான். பாமகவுடன் கூட்டணி இல்லை என்றால், வட மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதுதான் உண்மை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறுகளை பழனிசாமி உணர வேண்டும். தவறுகளை சரி செய்ய வேண்டும்." எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "சி.வி.சண்முகத்தை தவெக இயக்கலாம். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டத்துறையில் இருந்து கொழுக்கும் கனிமவளத் துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை.
சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிறார். சி.வி.சண்முகம்தான் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். குடும்ப ஆட்சியை பற்றி பேச சி.வி. சண்முகத்திற்கு யோக்கியதை இல்லை. அதிமுக மூழ்குகின்ற கப்பல் இல்லை. மரகதம் குமரவேலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
வளர்த்த இயக்கத்தை குறை சொல்ல சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க, தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியமைக்க முயற்சித்ததாக சி.வி.சண்முகம் தவறான தகவலை பரப்புகிறார். சி.வி.சண்முகம் தொடர்ந்து இப்படியே பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications