தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை... ஓ!! இது தான் காரணமா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தமிழக எம்எல்ஏக்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு பல மாதங்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.

இருப்பினும், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர் நிலைமை அப்படியே மாறியது. டிசம்பர் மாத்தில் கடைசி 2 வாரங்கள் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினசரி வைரஸ் பாதிப்பு 600ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபோக வேறு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டசபை கூட்டத்தொடர்

சட்டசபை கூட்டத்தொடர்

முன்னதாக தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நெகடிவ் சான்றிதழ்

நெகடிவ் சான்றிதழ்

அதன்படி வரும் ஜன.5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கவுள்ளது. அதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சட்டசபை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

Recommended Video

    15 to 18 வயதுள்ள மாணவர்களுக்கு COVID-19 Vaccine | Oneindia Tamil
     கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    இதனால் தமிழக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோல செய்தியாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இன்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+