No To Drugs என போட்டுவிட்டு! போதை கேசில் சிக்கிய அதிமுக நிர்வாகி! நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டியது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

AIADMK cadre become a reason for Actor Srikanth drugs case How did police crack

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இவரிடம் சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் மூலமாக இன்னும் சில நடிகர்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் இவர் வழக்கில் சிக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். இவருடன் அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தற்போது இந்த வழக்கில் கைதான அவரிடம் இருந்த போன் ஆதாரங்களின்படி அவர் போதை பொருள் விற்றதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் மீதான விசாரணை

முக்கியமாக பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன. அதாவது அவர் சென்னையில் போதை பொருள் டீலர் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் யாரிடம் போதைப்பொருளை வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரையும் விசாரித்தனர். அப்போது, பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட இவர்கள் கொக்கைன் டீலர்களாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி

இவரிடம் பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த், கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அதிமுக நிர்வாகி இவரிடம் போதை பொருட்களை விற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் இருந்து 40 முறை போதைப்பொருளை பயன்படுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாத், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் Say No To Drugs என்று திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று போட்டுவிட்டு அதிமுக நிர்வாகியே போதை பொருள் வழக்கில் சிக்கி இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

உறுதி செய்யப்பட்டது

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இவரிடம் சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+