கூட்டணியே முடிவாகலை.. வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக அதிரடி!
சென்னை: அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் ஜனவரி 9 முதல் ஜனவரி 13 வரை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடக்கும் என்றும், முதல் நாளில் கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதமே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23 வரை முதற்கட்டமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதையடுத்து மீண்டும் டிசம்பர் 28 முதல் 31 வரை 2ஆம் கட்டமாக விருப்ப மனு பெறப்பட்டது.

மொத்தமாக சுமார் 10,100 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டும் சுமார் 2,700 விருப்ப மனுக்களும், கேரளா மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட சுமார் ஆயிரம் பேரும் விருப்ப மனு அளித்தனர். இந்த நிலையில் அடுத்தக் கட்டமாக விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணலை எடப்பாடி பழனிசாமி நடத்த உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 9 முதல் 13 வரை விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 9ஆம் தேதி கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேகம் மாநகரை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து அதே நாளில் சேலம் புறநகர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது. ஜனவரி 10 காலையில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் அளிக்கப்பட உள்ளது. பின்னர் மாலையில் திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
ஜனவரி 11ஆம் தேதி விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது. பின்னர் மாலையில் நாகை, மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் அளிக்கப்பட உள்ளது.
பின்னர் ஜனவரி 12 காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கும், ஜனவரி 13ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் விருப்ப மனு அளித்தவர்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.; அதேபோல் புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கும் ஜனவரி 13ல் நேர்காணல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியாவதற்கு முன்பாகவே வேட்பாளர்களுக்கான நேர்காணலை எடப்பாடி பழனிசாமி தொடங்கவிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்












Click it and Unblock the Notifications