Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருப்ப மனு வாங்காத நிர்வாகிகள்.. களையெடுக்கும் எடப்பாடி.. அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிர்வாகிகளில் யாரெல்லாம் விருப்ப மனு அளிக்கவில்லை என்ற பட்டியலை எடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் யாரெல்லாம் விஜய் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து தேர்தலுக்கு முன்பாக களையெடுப்பு நடவடிக்கையை தொடங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக சார்பாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெற்றது. தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 23 முதல் 31 வரை நேரம் அளிக்கப்பட்டது. இதன்படி அதிமுக சார்பாக சுமார் 10,200 பேர் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

AIADMK

அதில் தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். மீதமுள்ள விருப்ப மனுக்கள் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், புதுச்சேரியில் போட்டியிடவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் 10 ஆயிரம் பேராவது தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி பெயரில் இத்தனை விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிர்வாகிகள் சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே விருப்ப மனுக்கள் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்த பின் பல்வேறு அதிமுக புள்ளிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

ஏற்கனவே சேலம் முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன் தவெகவில் இணைந்துவிட்டார். கொங்கு மண்டலத்தில் இன்னும் சில முன்னாள் எம்எல்ஏ-க்கள், முக்கிய புள்ளிகள் விஜய் கட்சியில் இணையலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக தரப்பில் மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்பட்ட யாரெல்லாம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி ஆராய அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த விசாரணையின் முடிவில் எந்தெந்த நிர்வாகிகள் எல்லாம் விஜய் கட்சிக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவும் கூறி இருக்கிறார். இதன் மூலமாக அதிமுகவில் விரைவில் களையெடுப்ப பணிகள் தொடங்கப்படலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களில் சீட் கிடைக்கவில்லை என்றால், விஜய் கட்சிக்கு செல்லும் திட்டத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் அதிமுக தலைமை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய் மீதான அட்டாக்கை அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+