மக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக
Recommended Video
சென்னை: ஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் வந்து வாக்களித்தார்.
அப்போது பேசிய அவர், "ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என்றும் எல்லோரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்டாலின் நம்பிக்கை
மேலும் அவர் பேசுகையில், "இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது. 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் மக்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

ஸ்டாலின் மீது புகார்
இந்நிலையில் முக ஸ்டாலினின் பேட்டி தேர்தல் விதிகளை மீறிய செயல் என அதிமுக தலைமை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளது.

ஆட்சி மாற்றம்
இது தொடர்பாக அதிமுகவின் சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் அளித்துள்ள புகாரில், "திமுக தலைவர் மு க ஸ்டாலின், இன்று வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், மத்திய மாநில அரசுகள் மீது ஏற்கனவே கூறிய தவறான குற்றச்சாட்டுகளை இன்றும் கூறி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் என வாக்களர்களை எண்ணத்தை திசை திருப்ப பார்த்துள்ளார்.

ஸ்டாலின் தவறான பேட்டி
மேலும் ஆளும் கட்சியினர் பணம் விநியோகிப்பதாகவும், அதற்கு அடிமையாகி ஓட்டளிக்கக்கூடாது என்றும் தவறான முறையில் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் நாளில் அளித்துள்ள இந்த பேட்டி இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி தவறாகும். எனவே ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

அதிமுக புகார்
இதேபோல் மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று வாக்களித்துவிட்டு, அளித்த பேட்டியில் ஆளும் கட்சி மீது தவறான முறையில் விமர்சித்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி?












Click it and Unblock the Notifications