திருப்பூர் உட்பட 3 மாவட்டங்கள் பிரிப்பு.. புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. அதிரடி காட்டும் அதிமுக
சென்னை: அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு அதிமுக ஜரூராக தயாராகி வருவதை இந்த மாவட்ட பிரிப்பு காட்டுகிறது.

இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் மேற்குமாவட்ட செயலாளராக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே. வைரமுத்து, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி., வைத்திலிங்கம், விருநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications