10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்ட சீல்.. எடப்பாடி வசமான அதிமுக தலைமை அலுவலகம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிச்சாமியின் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிமன்றம் அதிமுக பொதுக் குழுவை அக்கட்சியின் சட்டவிதிகளின் படி நடத்திக் கொள்ள தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்தது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற கடந்த 11-ஆம் தேதி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விரைந்தார். இதையறிந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு கூடினர்.

தள்ளுமுள்ளு
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறை சம்பவமும் ஏற்பட்டு பல தொண்டர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நுழைந்தார். இதன் பின்னர் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருந்தது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று சீல் வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக தலைமை அலுவலகம்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களும் அனல் பறந்தன. இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்பதால் சீலை அகற்றினால் அப்பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்ற வழக்கு
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

இன்று திறப்பு
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. முதலில் அலுவலக வாயிலில் இருந்த சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் அகற்றினார். இதையடுத்து தலைமை அலுவலகத்தின் சாவியானது வருவாய்த் துறையினரிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர்கள் மகாலிங்கம், மனோகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications