உள்ளாட்சி தேர்தல்.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக.. விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு
அதிமுகவில் விருப்ப மனு விநியோக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று மின்னல் வேகத்தில் அஇஅதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசியல் வட்டாரத்தை தட்டி எழுப்பியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக - திமுக ஜரூராக தயாராகி வருகின்றன.
விட்டதை எல்லாம் இந்த உள்ளாட்சி தேர்தலில் பிடித்து விட வேண்டும் என்று திமுக தரப்பில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, இந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்க உள்ளது.

துணை முதல்வர்
அதனால், கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக, தமாகா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்வரும், முணை முதல்வரும் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட மாவட்ட செயலாளர்களை அழைத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்துள்ளனர். சாதி ரீதியாக மட்டுமின்றி, அனைத்து வகையிலும், வாக்காளர்களை இழுக்க வியூகம் வகுத்து வருகிறது.

அஇஅதிமுக
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் 15, 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு
மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி
தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிக்கான சீட் ஒதுக்கீடுகள் குறித்து இறுதி முடிவு எதுவும் வெளிவராத நிலையில், விருப்ப மனுக்கான அறிவிப்பை அதிமுக அதிரடியாக வெளியிட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications