கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து பா.வளர்மதி போட்டி? முக்கிய இலாகா? எடப்பாடி பழனிசாமி வியூகம்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை நிறுத்தலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவுறும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மிகவும் முக்கியமானது.

அதிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்விலும் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டும் என தெரிகிறது.
மேலும் தேர்தல் அறிக்கையையும் மக்களை கவரும் வகையில் தயார் செய்யப்படும் என தெரிகிறது. திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு அதிமுகவும் இது போன்ற திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கொண்டு வர முனைப்பு காட்டுகிறதாம்.
பிரதமர் நரேந்திர மோடி
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது பெண்களுக்கு மாதம் ரூ 2500, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துமாறும் நிதியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளாராம்.
தேர்தல் அறிக்கை
எனவே அதிமுகவுக்கு நிதி குறித்து கவலை இல்லை என்பதால் தேர்தல் அறிக்கையை எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். சரி!வேட்பாளர் என வரும் போது வலிமையான நபர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாம் அதிமுக.
ஆதிராஜாராம் என்ன ஆனார்
அதிலும் இந்த தேர்தலில் எப்படியாவது முதல்வர் ஸ்டாலினை தோற்கடிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜாராம் களம் கண்டார். ஆனால் ஸ்டாலின் பெற்ற 1.05 லட்சம் வாக்குகளில் 50 சதவீதத்தை கூட அவரால் பெற முடியவில்லை.
ஸ்டாலினுக்கு கடும் போட்டியாளர்
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் ஸ்டாலின். அவரை தோற்கடிக்க இந்த முறை tough contestant -ஐ களத்தில் இறக்க எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறாராம்.
எஸ்ஐஆர் பணிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியில் (எஸ்ஐஆர்) முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் போட்டியிடுவாரா
எஸ்ஐஆருக்கு ஆரம்பத்திலிருந்தே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒரு வேளை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிரணி செயலாளருமான பா.வளர்மதியை நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம்.
விருப்பமனு
எனினும் அண்மையில் நடந்த விருப்ப மனு நிகழ்வில் பா. வளர்மதி, ஆயிரம்விளக்கு அல்லது மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து விருப்பமனு கொடுக்குமாறு வளர்மதியிடம் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆதி ராஜாராம் இந்த முறை கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுக்கவில்லையாம்.
பா.வளர்மதியின் முதல் தேர்தல்
பா.வளர்மதி, 1984 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் 2001 ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
2006 ஆம் ஆண்டு ஆலந்தூரில் போட்டி
2006 ஆம் ஆண்டும் ஆலந்தூரில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தார்.
2016 இல் நடந்த தேர்தல் முடிவு
2016ஆம் ஆண்டு அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கேபினெட் அமைச்சர் பதவிக்கு இந்த பாடநூல் கழகத் தலைவர் பதவி சமம் ஆகும்.
பா. வளர்மதிக்கு அமைச்சர் பதவி
2021 ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் திமுகவின் தா.மோ. அன்பரசனை எதிர்த்து வளர்மதி போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே இந்த முறை வளர்மதி கொளத்தூரில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை ஸ்டாலினை தோற்கடித்து அதிமுக ஆட்சி அமைந்தால் பா.வளர்மதிக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications