10 கோடி விளம்பர பாக்கி.. கடுப்பான ஓபிஎஸ், இபிஎஸ்.. சீட் கிடைக்குமா.. கலக்கத்தில் நிர்வாகிகள்
சென்னை: நமது அம்மா நாளிதழுக்கு ரூ.10 கோடி விளம்பரப் பாக்கியை கட்டினால் மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் அதிமுக தலைகளிடம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கறாராக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவில் சீட் பெற அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

விளம்பரம்
அவர்களில் பலர் நமது அம்மா நாளிதழுக்கு விளம்பர பாக்கியை கட்டாமல் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் விளம்பர பாக்கியை கட்டுமாறு கறாராக உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

கட்சி நாளிதழ்
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரில் புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழ் இயங்கி வருகிறது. கட்சி சார்ந்த நடவடிக்கைகள், அறிவிப்புகள், கொள்கைகள் ஆகியவை அதில் தான் வெளியாகி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது, தினசரி அதிமுகவின் சாதனைகளை வெளியிடுவது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பதிலடி கொடுப்பது போன்றவை நமது அம்மா நாளிதழில் பிரதானமாக வெளியாகும்.

விளம்பர பாக்கி
அந்த நாளேட்டில், அதிமுக சார்ந்த கட்சி விழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், பொறுப்பேற்பு நிகழ்ச்சிகளின் போது தங்களது விளம்பரங்களை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வெளியிடுவது வழக்கம் ஆனால், தங்களது கட்சி சார்பில் வெளியாகும், நாளிதழில் தாங்கள் கொடுத்த விளம்பரங்களுக்கான கட்டணங்களை கட்சி நிர்வாகிகள் சரியாக செலுத்துவதில்லை என்ற புகார்கள் உள்ளது.

ஓபிஎஸ் இபிஎஸ் கறார்
அதிமுக நிர்வாகிகள் விளம்பர பாக்கியாக ரூ.10 கோடி வரைக்கும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. . இந்த தகவல் ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம் இதனையடுத்து அவர்கள் இருவரும்,''இந்த விளம்பரப்பாக்கி தொகையை முழுமையாக கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட்டும், பதவியும் கொடுக்கப்படும். என்றும் பாக்கி வைத்துள்ளவர்களிடம் கறாராக நடந்து கொள்ளுங்கள்''என உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications