அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டை உடைத்து கைப்பற்றினார் ஓபிஎஸ்! இபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு!
சென்னை: அதிமுக பொருளாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி அணி பறித்துவிடக் கூடும் என்கிற நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைப்பற்றி உள்ளது. இதனைத் தடுக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இப்பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படும் நிலை உள்ளது.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். இதனை சமாளிக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இன்று காலை முதலே ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினரோ ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடுவதைத் தடுக்க முயன்றனர். தொடக்கத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் பலருக்கு மண்டை உடைந்தது. ஒருவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதன்பின்னர் ஓபிஎஸ் அலுவலகம் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. இதன்பின்னர் காட்சிகள் தலைகீழாக மாறின. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி படங்கள் கிழித்து எறியப்பட்டன. அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகப் பகுதி போர்க்களமாக காட்சி தருகிறது.












Click it and Unblock the Notifications