நெய்வேலி தொகுதி.. காய் நகர்த்தும் பாமக நிர்வாகிகள்.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் நெய்வேலி தொகுதியை மையமாக வைத்து பாமக மற்றும் அதிமுகவினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாமகவில் ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் தனியாக வேட்பாளரை களமிறக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவும் நெய்வேலி தொகுதியை விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் கட்சியினர் தங்களின் தொகுதிகளில் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். இந்த முறை திமுக கூட்டணியில் நெய்வேலி தொகுதியை குறி வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு தவாக வேல்முருகன் வெற்றி பெற்றார்.

இவர் 2 மாதங்களுக்கு முன்னதாகவே பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் தனது சகோதரர் மூலமாக நெய்வேலி தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் திமுக தலைமை நெய்வேலி தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் நெய்வேலியில் திமுக கட்டமைப்பு ரீதியாக வலுவாக உள்ளது.
திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மீண்டும் நெய்வேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். அதேபோல் அதிமுக சார்பாக சொரத்தூர் ராஜேந்திரன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் பேச்சுகள் கிளம்பி இருக்கிறது.
ஆனால் அன்புமணி தரப்பு பாமகவோ தங்களுக்கு நெய்வேலி தொகுதி அளிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். ராமதாஸ் தரப்பு நெய்வேலி தொகுதியில் மிகப்பெரிய கண் வைத்திருக்கிறது. ராமதாஸ் ஆதரவாளரான ஜெகன் தான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் இம்முறை களமிறங்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
அன்புமணி அணியில் பெரிய வேட்பாளர் இல்லையென்றாலும், எம்பி தேர்தலின் போது போட்டியிட்ட தங்கர் பச்சானை மீண்டும் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவர் மட்டுமல்லாமல் பாமக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமியும், பாமக வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரும் பரிந்துரை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
-
சிபிஎம், சிபிஐ கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டி? திருப்பரங்குன்றத்தில் நேரடியாக களமிறங்கும் திமுக! -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மண் எடுக்க முடியாத இரண்டு தொகுதிகள்.. ஆச்சர்யம் தரும் வரலாற்று உண்மை! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!










Click it and Unblock the Notifications