Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு மணிமண்டபம்! அதிமுக வைத்த கோரிக்கை! அமைச்சர் தந்த 'நச்' பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு காலமான சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதிக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் முன் வைத்தார் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா தனிக் கேள்வி எழுப்பும் பட்சத்தில் அரசு அது குறித்து பரிசீலிக்கும் என ஒற்றை வரியில் பதிலளித்தார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

இதேபோல் காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு மணிமண்டபம் அமைப்பது பற்றியும் பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

சிங்கம்பட்டி ஜமீன்

சிங்கம்பட்டி ஜமீன்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியை பொறுத்தவரை தமிழில் ஆழ்ந்த புலமையும், அறிவும் மிக்கவர். அதேபோல் ஆங்கிலத்திலும் மிக சரளமாக பேசும் ஆற்றலை பெற்றவர். ராமநாதபுரம் சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி மகன் தான் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி என்பது கூடுதல் தகவல். சிங்கம்பட்டி ஜமீனை பொறுத்தவரை கலை ஆர்வம் கொண்டவர். ஜமீன்தாரக இருந்தபோதிலும் கூட எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி எளிமையை பேணி நடந்தவர்.

இசக்கி சுப்பையா

இசக்கி சுப்பையா

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரன்மனையில் வசித்து வந்த கடைசி ஜமீன் தாரரான முருகதாஸ் தீர்த்தபதி புற்றுநோய் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் காலமானார். இவர் காலமாகிய பிறகு 2020 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி தான் நடைபெற்றது. அப்போதெல்லாம் அவருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து கோரிக்கை வைக்காத அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா இப்போது அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் சாமிநாதன்

அமைச்சர் சாமிநாதன்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா, சிங்கம்பட்டி ஜமீனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து தரப்படும் என வினவினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இது தொடர்பாக உறுப்பினர் இசக்கி சுப்பையா தனிக் கேள்வி எழுப்பும் பட்சத்தில் அரசு பரிசீலிக்கும் எனக் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

முன்னதாக சட்டசபையில் பேசுவதற்காக பேப்பரில் எழுதி தயாரித்து எடுத்து வந்திருந்த வரலாற்று தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தார் இசக்கி சுப்பையா. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''தம்பி இசக்கி சுப்பையா நீங்க வரலாற்றில், தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என எனக்குத் தெரியும், விஷயத்துக்கு வாங்க'' எனக் கூறி நோஸ்கட் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+