சசிகலாவுக்கு எதிராக மீண்டும் தீர்மானம்..டிச.1-ல் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்?
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1-ந் தேதி அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்திலாவது அமைதியான முறையில் சில தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக தலைவர்கள் முயற்சித்து வருக்கின்றனராம்.
அதிமுகவின் செயற்குழு டிசம்பர் 1-ந்தேதி கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட சீனியர்கள் முடிவு செய்துள்ளனராம். இது தொடர்பாகத்தான் இரு தலைவர்களும் தங்களது அணியினருடன் தீவிரமாக ஆலோசித்தும் வருகின்றனராம்.

மா.செ.க்கள் கூட்டத்தில் சலசலப்பு
அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழிகாட்டும் குழு, சசிகலா சேர்க்கை ஆகியவற்றால் ஆகப் பெரும் பிரச்சனைகள் வெடித்தன. அதிமுக பெருந்தலைகளுக்குள் நடந்த வார்த்தை மோதல்கள், தகராறுகள், விரும்பத்தகாத பேச்சுகள் என ஏகத்துக்கும் நடந்த சம்பவங்களால் அதிமுகவின் இமேஜ் சரிந்தது. குறிப்பாக அன்வர் ராஜா, சி.வி.சண்முகம் இடையேயான மோதல் அதிமுக சீனியர்களை அதிர வைத்தது. அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்தார் சி.வி.சண்முகம் என்கிற தகவல் பரவியதால் இனி அதிமுகவின் ஒவ்வொரு கூட்டமும் இப்படித்தான் களேபரங்களில் முடியும் போல என்கிற கருத்தும் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கேள்விக்குறியாகும் கட்டுப்பாடு
இந்த போக்கு அதிமுகவின் இரட்டை தலைமையின் கீழ் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில், தான் கட்சியின் செயற்குழுவை கூட்டி விவாதிக்கலாம் என தீர்மானித்துள்ளனர் அதிமுக தலைவர்கள். இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களது தரப்பினருடன் என்ன மாதிரியாக இந்த கூட்டத்தை அணுகுவது என ஆலோசிக்கின்றனராம்.

டிச.1-ல் அதிமுக செயற்குழு
இதன்படி டிசம்பர் 1-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் புதிய அவைத்தலைவர் தேர்வு, அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல், வழிகாட்டும் குழுவின் எண்ணிக்கையை அதிகரித்தல் அல்லது கலைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, சசிகலா விவகாரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சீனியர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
குறிப்பாக, சசிகலா எந்த சூழலிலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என்றும், அவரை சேர்க்க வலியுறுத்துவது, ஆதரித்து பேசுவது என கட்சியினர் யாரும் செயல்படக்கூடாது என்றும் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி எல்லாம் சுமூகமாக நடந்துவிடுவதற்கு அதிமுகவின் ஏதோ ஒருதரப்பு விட்டுக் கொடுத்துவிடாதே என்கிற ஆதங்க புலம்பலையும் சில சீனியர் தலைவர்களிடம் கேட்கவும் முடிகிறது.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications