தொடர் தோல்வி.. எடப்பாடிக்கு 2026 தேர்தல் 'அக்னி பரீட்சை'.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்காமே! என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எதிர்காலம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கின்றன.

tamil nadu assembly elections 2026 aiadmk

தொடர் தோல்விகளும் தலைமை அழுத்தமும்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, அதன்பின் வந்த இரண்டு மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் ஈரோடு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு இடைத்தேர்தல்கள் என வரிசையாக சுமார் 11 தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தொடர் சறுக்கல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு தோல்வியின் போதும், "தலைமையை மாற்ற வேண்டும்" அல்லது "கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் வலுத்தன.

வெளியேறிய 'சத்தங்கள்' - எடப்பாடிக்கு நிம்மதியா?

இந்தத் தேர்தலின் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த முக்கிய புள்ளிகள் இப்போது கட்சியில் இல்லை. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது திமுகவுடன் கைகோர்த்துள்ளார். கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ளார். டிடிவி தினகரனோ அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தாலும், தனி அமைப்பாகவே செயல்படுகிறார்.

இதனால், கட்சியின் பொதுக்குழுவிலோ அல்லது செயற்குழுவிலோ எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாகக் குரல் கொடுக்கக் கூடிய 'உட்கட்சி எதிர்ப்பாளர்கள்' தற்போது கட்சியில் இல்லை. இது அவருக்கு ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய சூழல் வேறு விதமாக இருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

காத்திருக்கும் சவால்கள்: சென்னை மற்றும் கொங்கு மண்டலம்

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களாகவே சரிந்து காணப்படுகிறது. ஒருவேளை இந்தத் தேர்தலிலும் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறினால், தற்போது அமைதியாக இருக்கும் சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் எடப்பாடிக்கு எதிராகக் கொடி பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

'டூ ஆர் டை' யுத்தம்

கருத்துக் கணிப்புகள் பலவும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது முழு பலத்தையும் காட்டிப் பிரச்சாரம் செய்துள்ளார். சொல்லப்போனால் அதிமுகவில் அவர் மட்டும்தான் கொஞ்சம் அதிகம் பிரச்சாரம் செய்தார். மற்றவர்கள் பிரச்சாரம் பெரிதாக செய்யவே இல்லை. பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அதிமுக முன்வைத்துள்ளது. ஆனால் எடப்பாடி மட்டுமே பெரிதாக பிரச்சாரம் செய்தது.. கட்சிக்கு பின்னடைவுதான்.

ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், எடப்பாடி பழனிசாமி தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளை மறுநாள் மக்கள் அளிக்கும் தீர்ப்பு, அதிமுகவின் அடுத்த எதிர்காலம் யார் என்பதையும், கட்சியின் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிமுக தொண்டர்கள் தற்போது வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற இக்கட்டான நிலையில், வாக்குப்பதிவு நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+