Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரத்தில் நரேந்திர மோடி போட்டி! பிரதமராகிறார் "தமிழர்".. அதிமுக முக்கிய புள்ளி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவதால் அவர் தமிழரா என அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் திமுக - பாஜக இடையே விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் எழுந்து வரும் நிலையில் கூட்டணி கட்சி என சொல்லிக் கொள்ளும் அதிமுகவினரிடையேவும் பாஜகவுக்கு மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

 AIADMK spokesperson says that PM Modi will contest in Ramanathapuram

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலே சொல்லப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தென் சென்னை தொகுதிக்கு குறி வைத்துள்ளார்.

அத்துடன் அவர் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு என தெரிவித்திருந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருங்காலத்தில் தமிழரை பிரதமராக்குவோம் என உறுதியெடுப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை வந்த போதும் அதை தமிழகம் இழந்துவிட்டது. அதற்கு காரணம் திமுகதான் என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவை சரமாரியாக பேசிய அமித்ஷா அதிமுகவுக்கு பல்வேறு விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார். தமிழகத்தை பொருத்தமட்டில் அதிமுக தலைமையில்தான் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அப்படியிருக்கும் போது அதிமுக சொல்லாமலேயே 25 தொகுதிகளில் வெற்றி என அமித்ஷா சொல்லிவிட்டு போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தென் சென்னை தொகுதியை குறி வைப்பதால் அதிமுக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழர் ஒருவர் பிரதமராவார் என அமித்ஷா சொன்னதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என கூறியே அமித்ஷா ஏமாற்றி வருகிறார் என திமுக விமர்சித்தது.

மேலும் இல கணேசனை பிரதமராக்கலாமே என்றும் திமுக ஆலோசனை கூறியிருந்தது. முதல்வர் ஸ்டாலினோ தமிழிசை அல்லது எல் முருகனை பிரதமராக்கலாம் என தெரிவித்திருந்தார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் பிரதமராகும் வாய்ப்பை இழந்த பிரதமர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், காமராஜருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டு அதை இந்திரா காந்திக்கு கொடுத்தார். அது போல் திமுக கூட்டணியில் இருந்த மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது கூட்டணி கட்சிகள் பிரதமராகும் காலமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

ஆனால் தற்போது அமித்ஷா சொல்வது என்ன என புரியவில்லை. தமிழரை பிரதமராக்குவோம் என்றால் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் நரேந்திர மோடியை போட்டியிட வைத்து அவரை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வார்களா, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிதான் (மோடி) பிரதமர் என கூறிக் கொள்வார்களா என தெரியவில்லை என்றனர்.

 AIADMK spokesperson says that PM Modi will contest in Ramanathapuram

இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம்
@AmitShah
தமிழ் நாடு
பிரதமர்
நரேந்திர மோடி
இராமநாதபுரம்
இவ்வாறு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+