உட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக
பேட்டியளிக்ககூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது
சென்னை: அதிமுக தலைமைதான் குழம்பி உள்ளதா, அல்லது நம்மைதான் போட்டு குழப்புகிறதா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதை உயிராக மதித்து நடந்தனர் நிர்வாகிகள். அமைச்சர்களும் கப்சிப்தான்.. அவர் முன்னாடி கைகட்டி நின்று கடைசிவரை அமைதி.. அமைதி என்பதைதான் கடைபிடித்தார்கள்.
அந்த அளவுக்கு அவர் மீது பயமும், மரியாதையும் கலந்தும் இருந்தது. கட்சியும் ஒரு கட்டுக்கோப்புக்குள் குலைந்துவிடாமல் இருந்தது. இப்போது எல்லாமே தலைகீழ்:

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா பேட்டி தந்தபோதே, நிர்வாகிகள் இதை பற்றி கருத்து சொல்ல கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. இதை யாராவது மதித்தார்களா? திருப்பரங்குன்றம் ஆலோசனை கூட்டம் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

கருத்து
இதற்குபிறகு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏதோ கூட்டம் முடிந்தவுடன் முக்கியமான அறிவிப்பு, கருத்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், இதற்கு மாறாக யாரையும் கருத்தே சொல்ல கூடாது என்று மற்றொரு உத்தரவு போடப்பட்டது. இதையாவது யாராவது மதித்தார்களா? கூட்டம் முடிந்த அடுத்த செகண்டே வெளியில் வந்து எதை பேசக்கூடாது என்றார்களோ, அதை பற்றிதான் முக்கிய அமைச்சர், நிர்வாகிகள் பேசி விட்டு போனார்கள்.

இடிக்கிறது
இன்னைக்கு இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊடகங்கள் கட்சி அங்கீகரிக்காத நிர்வாகிகளிடம் கருத்து கேட்கக் கூடாது. மீறினால் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இடிக்கிறது.

சிவி சண்முகம்
ஏற்கனவே உத்தரவை மீறிய ராஜன் செல்லப்பா மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ராஜன் செல்லப்பா என்றில்லை, அமைச்சர் சிவி சண்முகம் எத்தனையோ முறை பல விஷயங்களில், அதுவும் ஜெயலலிதா ஆஸ்பத்திரி விவகாரம் வரை வெளிப்படையாக கருத்து சொன்னார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் பாயவில்லையே ஏன்?

செல்லூர் ராஜூ
அவ்வளவு எதற்கு? தமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் இன்றும் சசிகலா ஆதரவாளர்களாகேவே இருந்து வருகிறார்கள். அதில் ரொம்ப முக்கியமானவர் செல்லூர் ராஜுதான். கடந்த டிசம்பர் 18-ம் தேதி மதுரையில் இவர் ஒரு பேட்டி அளித்தார். அதில், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போதுள்ள அதிமுக அரசை அமைத்தவர் மாண்புமிகு சின்னம்மாதான்" என்று முடிந்தவரை தன் விசுவாசத்தை காட்டி வருகிறாரே.. அதற்கு இதுவரை கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது என்றும் தெரியவில்லை.

அரசியல் கட்சி
நிர்வாகிகளுக்கு உத்தரவு போட தலைமைக் கழகத்துக்கு உத்தரவு உள்ளது. அதன்படி கருத்து சொல்லகூடாதுதான். ஆனால் மீடியாக்களிடம் பேசக்கூடாது என்பதை எப்படி கண்டிஷனாக போட முடியும்? மீடியா என்பது மக்களுக்கு செய்திகளை வழங்கும் ஒரு ஊடகம். அதிமுக உட்பட எந்த அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களையும் மக்களுக்கு சொல்வதுதான் வேலை.

எச்சரிப்பதா?
எனவே கட்டுப்பாட்டை மீறும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், செய்திகளையே வெளியிடக் கூடாது என்ற ரீதியில் ஊடகங்களை எச்சரிப்பது எப்படி அதிமுகவின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று தெரியவில்லை. அதிமுக தலைமை குழப்பத்தில் இருக்கா இல்லை நாமதான் குழம்பிப் போயிருக்கோமா ... ஒன்னுமே தெரியலையே!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications