ஓபிஎஸ்சை மாற்றுங்க.. சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் ஒற்றை தலைமையாக உருவெடுத்தார். அதோடு ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுக்குழு மூலம் அறிவித்தார்.

இதை எதிர்த்து சட்ட போராட்டங்கள் நடத்திய ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீதிமன்ற தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வரவே தற்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியின் கொடியையும் பெயரையும் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு ஓபிஎஸ் பதிலளிக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு எதிராக அடுத்தடுத்த மூவ்களை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதமும் பேரவை தலைவர் அப்பாவுவிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அடுத்தடுத்து நடந்த சட்டசபை கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையை அப்பாவு மாற்றவில்லை. இதற்கு சட்டப்பேரவையிலும் கடுமையான எதிர்ப்பை அதிமுக தெரிவித்து வந்தது. பல முறை அதிமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டாலும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று இல்லை எனவும் அதிமுக தலைமை பதவி விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சபாநாயகர் அப்பாவு சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ள சூழலில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர். செங்கோட்டையன், சி விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அப்பாவுவை தலைமை செயலகத்தில் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.
வரும் அக்டோபர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், சபாநாயகரை சந்தித்து மீண்டும் மனுவை அளித்துள்ளனர். ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரது இருக்கைகளையும் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அளித்த கோரிக்கை மனு விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இந்த முறை எந்த மாதிரியான முடிவு எடுக்க போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications