சென்னை டூ திருச்சிக்கு ரூ.55,000! புயலை காரணம் காட்டி விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை
சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பெங்களூர் வழியாக இயக்கப்படும் விமானங்களில் சென்னை டூ திருச்சிக்கு ரூ.55,636 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. புயல் இலங்கையில் பெரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது புயல் இலங்கையை கடந்திருக்கிறது.

இது சென்னையை நெருங்குவதற்குள் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வரை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, 54 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது. இவை அனைத்தும் திருச்சி, கோவை, சேலம், மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களாகும்.
குறிப்பாக ஏடிஆர் வகையை சேர்ந்த விமானங்களாகும். இந்த வகை விமானங்கள் 25,000 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே புயல் மேகங்களுக்கு நடுவில், காற்றின் தடுமாற்றத்தால் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மற்றபடி பெரிய ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் பெங்களூர் வழியாக திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. லீவு நாள் வந்துவிட்டால் போதும் சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது என்பதை போல, விடுமுறை நாட்களில் கட்டணத்தை உயர்த்துவதே இந்த விமான நிறுவனங்களுக்கு வேலையாக போய்விட்டது.
இன்று சென்னையிலிருந்து மதுரை போக வேண்டும் எனில், ரூ.25,599 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129 மட்டுமே. அதேபோல சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.55,636 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129 மட்டுமே. சென்னை-கோவைக்கு ரூ.24,134 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதுவே, சாதாரண நாட்களில் ரூ.4,351 கட்டணமாக வசூலிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் திடீரென தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்! பதறிய போலீஸ்! ட்விஸ்ட்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications