ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் மீண்டும் கைது.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடுத்து நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் ராயப்பேட்டை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பரந்தாமன் என்பவர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த வழக்கிலும் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 பேர் செருப்பை வைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.

airport moorthy arrested again in new case What happened next in Saidapet court

சிறிய கத்தி

அப்போது பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து விசிகவினரை ஏர்போர்ட் மூர்த்தி தாக்கினார். இதில் அவரை செருப்பால் தாக்கிவிட்டு தப்ப முயன்றன விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் நிலையத்தில் இருதரப்பு சார்பிலும் மாறி மாறி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொலை முயற்சி வழக்கு

இதனிடையே விசிகவினரை தாக்கிய விவகாரத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி வழக்கும் பாய்ந்தது. இந்த வழக்கில் அவரை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

வாடகை வீடு சொந்தம்

இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் ராயப்பேட்டை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பரந்தாமன் என்பவர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த வழக்கிலும் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.

நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் ஏர்போர்ட் மூர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். புதிய வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லாததால் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட கோர்ட்டு மறுத்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. அதேநேரம் குண்டர் சட்டம் மற்றும் கொலைமுயற்சி வழக்கு காரணமாக ஏர்போர்ட் மூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டம் எப்படி

குண்டர் சட்டத்தை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தான் நிவாரணம் பெற முடியும். அதாவது குண்டர் சட்டம் எந்த அடிப்படையில் போடப்பட்டது என்பது குறித்தும் வாதம் வைத்து, அது தவறு என நிரூபித்து மட்டுமே ஜாமீன் பெற முடியும். சாதாரண மற்ற வழக்குகளை போல் இதில் ஜாமீன் பெற முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+