பஸ்ல சொந்த ஊருக்கு போறீங்களா.. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகாரளிக்க அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செல்போன் எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது நடக்கிறது. சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லவும், மற்ற ஊர்களில் இருந்தும் சென்னைக்கும் வருவதற்கும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு போக 1500 முதல் 2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கிட்டத்தட்ட இதேபோல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் உள்ளது. இதேபோல் வரும் திங்கள் முதல் புதன் வரையிலும் டிக்கெட் கட்டணம் மதுரையில் இருந்து சென்னைக்கு இதேபோல் தான் 1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது. வழக்கமாக 1000 வரையில் இருக்கும் பேருந்து கட்டணம் விடுமுறை நாட்களில் அதிகமாகவே உள்ளது.
மதுரை வழித்தடத்தில் மட்டுமல்ல, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வழக்கமான நாட்களை விட அதிகமாகவே உள்ளது. அங்குமே 1000 ரூபாய் என்று இருக்கும் கட்டணம், 2000 அல்லது 2500 வரை அதிகமாகவே உள்ளது.
இதனிடையே பண்டிகை காலத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய வசதி அளிக்கப்படுவதில்லை என்றும் ஆம்னி பேருந்துகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்னி பேருந்துகளுக்கென்று மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன விதிகள் படி, கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை..
எனினும், பயணிகளின் நலன் கருதியும், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படாத வகையிலும் சங்கங்களே அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்காத வகையில் கண்காணித்து, மீறுவோரை அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.
ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்கள் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, கட்டண புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம் " இவ்வாறு கூறியுள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது போல் அரசு இதுவரைஆம்னி பேருந்துகளுக்கு எந்தவிதமான கட்டணமும் மற்ற பேருந்துகளை போல் நிர்ணயம் செய்யவில்லை. அரசு இதுபற்றி நிர்ணயம் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இதுபற்றி ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சிலர் கூறும் போது, ஆம்னி பேருந்துள் வாரஇறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் கட்டணம் குறைவாக இருக்கும். வாரஇறுதி நாட்கள் மட்டுமே பேருந்துகள் லாபகரமாக இயங்கும். இந்த சூழலில் மக்களின் தேவையை பொறுத்தே டிக்கெட் கட்டணம் இருக்கிறது என்றார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications