காவி மேடையில் திராவிட நாகரீகம்.. மோடிக்கு செங்கோல் கொடுத்து அசத்திய தலைவர்கள்!
பாஜக சார்பாக சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் வருகை புரிந்துள்ளனர்.
சென்னை: பாஜக சார்பாக சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் வருகை புரிந்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து உள்ளார். இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏறி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் இனி.. எம்ஜிஆர் ரயில்நிலையம்.. பிரதமர் மோடி அறிவிப்பு
ஒரே மேடையில் அமர்ந்தனர்
இதில் ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள் எல்லோரையும் மேடை ஏற்றியது பாஜக. பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஒரே மேடையில் உள்ளனர்
பெரிய செங்கோல்
பிரதமர் மோடிக்கு விழாவில் பெரிய செங்கோல் பரிசளிக்கப்பட்டது. அனைத்து கூட்டணி தலைவர்களும் இந்த பரிசளிப்பின் போது உடன் இருந்தனர். முதல்வர் இந்த செங்கோலை வழங்கினார். இந்த செங்கோல் ஆளுயர அளவிற்கு பெரிதாக இருந்தது.
படங்கள் திறக்கப்பட்டது
அதன்பின் விழாவின் ஒரு பகுதியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அங்கிருந்த தலைவர்கள் இவர்களின் புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தினார்கள். பிரதமர் மோடியும் இவர்களுக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
சிலைகள்
அதன்பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மோடிக்கு வழங்கினார். அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடராஜர் சிலையை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.