தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி கிடையாது.. ககன்தீப் சிங் திட்டவட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Chennai-ல் ஒரே மாதத்தில் நிகழ்ந்த மாற்றம்.. எப்படி சாதித்தார் Gagandeep Singh Bedi

    கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உள்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    வியாபாரம்

    வியாபாரம்

    ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் முடிந்த பின்னர் கோயம்பேடு சந்தையில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார். கடந்த கொரோனா முதல் அலையின்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதி கிளஸ்டராக உருவெடுத்தது.

    வியாபாரிகள்

    வியாபாரிகள்

    இந்த மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கோயம்பேட்டில் கடைகள் மூடப்பட்டு சிறிது நாட்களுக்கு திருமழிசை அருகே கொண்டு செல்லப்பட்டது.

    மார்க்கெட்

    மார்க்கெட்

    பின்னர் நிலை சீரானதும் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கே கடைகள் வந்துவிட்டன. இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டு பகுதிகளுக்கு வரும் சென்னை சுற்று வட்டார பகுதி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+