”எங்களுடன் சேர்ந்தால் 60-70 தொகுதிகள் வெல்லலாம்.. பிப். 14ம் தேதிக்குள் கூட்டணி முடிவு”- கிருஷ்ணசாமி
சென்னை: வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை எட்டுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்தால் 60 தொகுதி முதல் 70 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி தெரிவித்து வந்தார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் தங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசு அதற்கு செவி சாய்க்காமல் மின்சாரம் போக்குவரத்து வசதிகள் ரேஷன் பொருட்களை எல்லாம் வழங்காத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொழிலாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரத்தில் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நேற்றைய தினம் மின்சாரம் முழுமையாக மாஞ்சோலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ரேஷன் பொருட்கள் அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வந்தால் கூட எல்லா கிராமத்திலும் முறையாக குடிநீர் வசதிகள் கிடைப்பதில்லை.
தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 12 அல்லது 14ஆம் தேதிக்கு உள்ளாக கூட்டணி குறித்து முடிவெடுத்து விடுவோம். தமிழகத்தில் நல்ல அரசு அமைய வேண்டும். அதற்காக நாங்கள் முடிவு செய்வோம். ஆளுங்கட்சியில் இருக்கும் காங்கிரஸோ அல்லது மற்ற கட்சியும் இன்னும் நாங்கள் கூட்டணியில் இருப்போம் என்று கூறுகிறார்கள் தவிர சீட்டுகளை பற்றி இன்னும் பேசவில்லை. நாங்கள் பங்குபெற்றதும் மோசமான ஆட்சியையும் நல்லாட்சியாக மாற்றுவோம்.
அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தினர் தங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனவும் சொல்ல மாட்டேன் வரவேண்டாம் எனவும் கூற மாட்டேன். அனைவரும் ஓபனாக இருக்கின்றனர். கதவை திறந்து வைத்திருக்கிறோம். நல்ல முறையிலான காற்று வந்தால் திறந்து வைப்போம். மோசமான காற்று வந்தால் கதவை மூடிவிடுவோம். 60 தொகுதி முதல் 70 தொகுதிகள் வரை நாங்கள் பங்கேற்கும் கூட்டணிகள் வெற்றி பெறக்கூடிய அளவில் எங்களது வாக்கு வங்கி இருக்கிறது. தனித் தொகுதியை விட பொது தொகுதிகளில் எங்களுடைய வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications