குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்
சென்னை: வரும் 22 ஆம் தேதி அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வானார்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப் பெட்டகம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் என்று கூறிய, தினகரன் சசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று விளக்கம் அளித்தார்.
சட்டப்போராட்டத்தில் எங்களுக்கு இல்லை என்றாகி விட்டது என்பதால், அதிமுகவை பற்றி இனி நான் பேச முடியாது என்றும், அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்ரல் 22ல் மனு அளிக்கவுள்ளோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications