அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு! எதிர்பார்த்தது ஒன்று! கிடைத்தது ஒன்று!
சென்னை: அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இலாக்கா மாற்றங்களில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பவர்ஃபுல் இலாக்காவான நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் சாமிநாதன்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள், ஜூனியர்களுக்கு எல்லாம் முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததால் வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்செட் மனநிலையிலேயே காலத்தை கடத்தி வந்தார்.
இப்போது நடைபெற்ற இலாக்கா மாற்றத்தின் போதாவது சீனியர் என்ற அடிப்படையில் தனக்கு பால்வளத்துறையோ அல்லது வேறு ஏதேனும் முக்கியத் துறையோ ஒதுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் எதிர்பார்த்தார்.
ஆனால் அது போல் அல்லாமல் கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் தொழில்துறையுடன் சேர்ந்து இருந்து வந்தது.
இப்போது தங்கம் தென்னரசு வசம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை கொடுக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக தொல்லியல் துறை மட்டும் அவர் கவனிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications