Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் போலி பட்டா, போலி பத்திரம்.. அம்பத்தூரில் 2 கோடி ரூபாய் நிலம் காலி.. இப்படியும் நடக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூரில் போலி ஆவணம், போலி பட்டா மூலம் ஆள் மாறாட்டம் செய்து 2கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து ஏமாற்றி வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்கள். நிலத்தை வைத்திருந்தவரும் சரி, அதை வாங்கியவரும் சரி, இப்போது சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள்.. ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்து நிலத்தை அபகரிப்பது, போலியாக வாரிசு சான்றிதழ் வாங்கி நிலத்தில் வில்லங்கம் செய்வதும் ஆங்காங்கே நடக்கிறது. மக்கள் கவனமாக இல்லாவிட்டால் பெரிய சிக்கலை சந்திப்பார்கள்.

தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் ஒரு ஊர் என்றால் அது சென்னை தான். சென்னையில் வீடு வாங்குவது இடம் வாங்குவது, கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. ஆனால் சென்னையில் வாங்கிவிட முடியாது. செ ன்னையின் புறநகரில் கூட வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது.

Ambattur Man arrested for making fake documents and defrauding land of Rs 2 crore in Chennai

இதனால் பலர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பட்டா வாங்க முயற்சிக்கிறார்கள். சிலர் அரசு நிலங்களை ஏமாற்றி மக்களுக்கு விற்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் பலர் குளம், குட்டைகளில், நீர் வழிப்பாதைகளில், மேய்ச்சல் புறம்போக்கில் , பூமி தானா நிலத்தில், அனாதீன நிலத்தில் வீடு வாங்கி அவஸ்தை படுகிறார்கள்.

சென்னையில் அம்பத்தூர் முதல் பட்டாபிராம் வரையிலும், போரூர் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் மீஞ்சூர் வரையிலும், தாம்பரம் முதல் ஒரக்கடம் வரையிலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், கிளாம்பாக்கம் முதல் கேளம்பாக்கம் வரையிலும் ரியல் எஸ்டேட் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதியில் சிலர் போலி ஆவணங்கள், போலி பட்டா மூலம் மக்களை ஏமாற்றி நிலத்தை ஆள்மாறாட்டம் செய்வது ஆங்காங்கே நடக்கிறது. அப்படித்தான் 2 கோடி நிலத்தை ஒருவர் ஏமாந்துள்ளார்.

சென்னை மாதவரம் அடுத்த எருக்கஞ்சேரி ஜி.என்.டி. சாலையில் வசிக்கும் 52 வயதாகும் சிவானந்தம் விறகு கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறுகையில், "சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள எங்களுக்கு சொந்தமான 3410 சதுரஅடி கொண்ட சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் வேறு சிலருக்கு அந்த நிலத்தை விற்று மோசடி செய்து விட்டனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறி இருந்தார். இதுபற்றி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து போலியான பட்டா மற்றும் ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூர் அடுத்த பானு நகர், புதூர், செங்குன்றம் சாலையில் வசிக்கும் அசோக்குமார் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+