இந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்!

இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சமூகத்தின் ஒற்றுமை குறித்து பேசியவர் அம்பேத்கர் : இயக்குனர் பா.ரஞ்சித்- வீடியோ

    சென்னை: இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

    Ambedkar is the father of Nation says, Director Pa. Ranjith

    அதில், சமூகத்தின் ஒற்றுமை குறித்து நிமிடத்திற்கு நிமிடம் பேசியவர் அம்பேத்கர், இந்தியாவின் தேசத்தந்தை அவர் மட்டும் தான் என்றார்.

    பட்டியலின சமூகத்தில் நடக்கும் ஆணவ கொலைகள் குறித்து அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட கருத்து கூறுவதில்லை. பட்டியலின சமூகத்திற்காக பேசினால், கட்சி நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பயந்து இருந்தால், உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுங்கள்.

    நாங்கள் உங்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்வோம் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஏற்கனவே, பொதுமேடையில், தமிழ் சமூகம் பற்றி இயக்குனர் அமீர் பேசிய போது, பா.ரஞ்சித் குறுக்கிட்டு காரசார விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+